22 Tuesday, 2025
2:22 pm
Spread the love

ஜோகோவிக் விரைவில் ஓய்வை அறிவிக்கும் வாய்ப்பு அதிகம் என்றே சொல்லப்படுகின்றது. அவரின் ஓய்வு குறித்து வதந்திகள் பரவிக்கொண்டே வருகின்றன. ஆனால் ஜோகோவிக் ஓய்வு குறித்தான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கின்றார்.


இரண்டு விஷயங்களால் நான் தொடர்ந்து விளையாட விரும்புகின்றேன் என கூறியிருக்கின்றார் நோவக் ஜோகோவிக். முதல் காரணம் டென்னிஸ் விளையாட்டின் மீது நான் கொண்ட காதல். டென்னிஸ் விளையாட்டின் மீது கொண்ட அதிக காதலால் நான் இந்த விளையாட்டை தொடர்ந்து விளையாட விரும்புகின்றேன் என்றார் ஜோகோவிக். மற்றொரு காரணமாக அவர் சொன்னது இந்த விளையாட்டினால் ஒரு மனிதராக அவருக்குள் ஏற்பட்ட மாற்றங்கள் தானாம்.


டென்னிஸ் விளையாட்டின் மூலம் தனி ஒரு நபராக நான் வளர்ந்துகொண்டே இருக்கின்றேன் என கூறினார் ஜோகோவிக். இந்த இரண்டு காரணங்களால் தான் நான் ஓய்வை அறிவிக்காமல் உள்ளேன் என்றார். களத்தில் டென்னிஸ் விளையாடிக்கொண்டிருக்கும் போது பல உணர்வுகளை எதிர்கொண்டுள்ளேன். சந்தோஷம், துக்கம், விமர்சனங்கள், கோபம் போன்ற பல விஷயங்களை எதிர்கொண்டு வருகின்றேன்.


அந்த விஷயங்கள் எல்லாம் என்னை பக்குவமாக மாற்றுகின்றது. டென்னிஸ் விளையாட்டால் ஒரு மனிதராக நான் உயர்ந்திருக்கின்றேன். எனவே அந்த விளையாட்டை என்னால் முடிந்த அளவிற்கு தொடர்ந்து விளையாட நினைக்கிறேன் என்றார் ஜோகோவிக். காயம் காரணமாகவும் இன்னும் சில விஷயங்களினாலும் நான் கடினமான சூழ்நிலைகளை சந்தித்துள்ளேன்.


அதிலிருந்து மீண்டும் வந்திருக்கின்றேன். எதிர்காலத்திலும் இதுபோன்ற சவால்களை என்னால் சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கையில் உள்ளேன் என பேசினார் ஜோகோவிக். இந்நிலையில் பிரெஞ்சு ஓபன் இந்தாண்டு மே மாதம் நடைபெற இருக்கின்றது. அந்த தொடரில் கலந்துகொள்வது தான் ஜோகோவிக்கின் தற்போதைய இலக்காக இருக்கும் என தெரிகின்றது. எனவே கண்டிப்பாக ஜோகோவிக் 2025 ஆம் ஆண்டு நடைபெறும் பிரெஞ்சு ஓபெனில் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.