22 Tuesday, 2025
2:22 pm
Spread the love


இக்கோயிலின் தலைமைச் சிற்பி குஞ்சர மல்லன் ராஜராஜப்பெருந்தச்சன் எனக் கோவிலின் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. கோவிலின் அடிப்பாகம் 5 மீட்டர் (16 அடி) உயரம் கொண்டுள்ளது. ஒரே கல்லில் அமைக்கப்பட்டுள்ள நந்தி 20 டன் எடையும், இரண்டு மீட்டர் உயரம், ஆறு மீட்டர் நீளம், இரண்டரை மீட்டர் அகலமும் கொண்டதாகும், லேபாஷி கோவில் நந்திக்கு அடுத்தபடியாக , இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய நந்தியுமாகவும் உள்ளது. முதன்மைக்கடவுளாக சிவலிங்கம் 3.7 மீட்டர் உயரமானது. வெளிப்பிரகாரம் 240 மீ 125 மீ அளவிலானது.108 பரத நாட்டிய முத்திரைகளைக்காட்டும் நடனச் சிற்ப்பங்கள் வெளிச்சுவற்றின் மேற்ப்பகுதியில் வடிக்கப்பட்டுள்ளன. பிற்காலத்தில் பாண்டியர்களால் 13ஆம் நூற்றாண்டில் அம்மன் சன்னதியும் விஜய நகர அரசர்களால் முருகன் சன்னதியும் கட்டப்பட்டு, மராத்திய அரசர்களால் விநாயகர் சன்னிதியும் புதுப்பிக்கப்பட்டது. தஞ்சை நாயகர்களாலும் இக்கோவில் மேம்படுத்தப்பட்டுள்ளது.


கல்வெட்டுக்கள்


சோழப்பேரரசர் அருண்மொழி வர்மன் கட்டிய இக்கோவிலின் பல இடங்களிலும் இருக்கும் கல்வெட்டுகள், இக் கோவிலில் தான் மடடுமின்றி, அரச குடும்பத்தினரும், அரசு அலுவலரும், படையினரும், பொதுமக்களும் ஆகிய எல்லோருடைய பங்களிப்பும், கோவிலின் பராமரிப்பிலும், பாதுகாப்பிலும் இருக்கும்படி பார்த்துக்கொண்டானெனக் கூறுகிறது. நிதிதேவைகள், அரசனால் இறையிலியாகக் கொடுக்கப்பட்ட நிலங்களில் இருந்தும், கிராமங்களிலிருந்தும் வரும் வருவாயினாலும், இன்னும் வேறு வழிகளிலும் பெற்றுக்கொள்ளப்பட்டது. கோவிலின் முதல் கல்வெட்டே இதற்கு சான்று. “நாம் கொடுத்தனவும், நம் அக்கன் கொடுத்தனவும், நம் பெண்டுகள் கொடுத்தனவும், கொடுப்பார் கொடுத்தனவும் இந்த கல்லலே வெட்டி அருள்க”.


தன்னுடைய பங்களிப்பு மட்டுமின்றி மற்ற எல்லோரின் பங்களிப்பையும் ஆவணப் படுத்தியதே வியத்தகு ஒன்று. இங்கு மன்னர் தனக்கு அடுத்தபடியாக முக்கியத்துவத்தை அக்கன், தன் மூத்த சகோதரியான குந்தவை தேவிக்கு அளித்தார். தன்னை வள்ர்த்து, கனவுகளை கொடுத்தவருக்கு அவர் செய்யும் சிறப்பாகும் இது. அடுத்து பெண்கள் என்னும் சொல்லின் மூலம் அவரது படடத்தரசியான தந்தி சக்தி விடங்கி மற்றும் மனைவியர் கொடுத்த கொடைகளும் பட்டியலிடப்படுகின்றன. கோவிலில் அன்றாட கருமங்களை ஒழுங்காகச் செயல்படுத்துவதற்குப் பணியாட்களை தேவைக்கேற்ப நியமிக்கப்பட்டிருந்ததாகத் தெரிகிறது. 50 ஓதுவார்களும், 400 நடன மாதர்களும் கோவிலில் இருந்ததாகக் கல்வெட்டுச் சான்றுகள் கூறுகின்றன.


தஞ்சைப் பெரிய கோவில் சிறப்பு:

இக்கோவில் விமானத்தின் உயரம் 216 அடி (66மீ) உயரம் கொண்டது. இக்கோவிலில் தமிழின் சிறப்புகளும் மாமன்னர் ராஜராஜ சோழனின் தமிழ் பற்றும் விளங்கும். கோவிலில் உள்ள சிவ லிங்கத்தின் பீடத்தின் உயரம் 18 அடி தமிழின் மெய் எழுத்துக்கள் 18, கோவிலின் கோபுரத்தின் உயரம் 216 அடி தமிழின் உயிர் மெய் எழுத்துக்கள் 216, சிவ லிங்கத்திற்கும் நந்திக்கும் உள்ள இடைவெளி 247 அடி தமிழ் மொழியின் மொத்த எழுத்துக்கள் 247 ஆகும்.


இரண்டு அல்லது மூன்று மட்டுமே கொண்டு கோவில்கள் கட்டப்பட்டு வந்த காலத்தில் , கற்களே கிடைக்காத காவிரி சமவெளிப் பகுதியில், 15 தளங்கள் கொண்ட சுமார் 60மீ உஉயரமான ஒரு கற்கோவிலை இராஜராஜன் எழுப்பினார். இத்தகையதொரு பிரம்மாண்டமான கோவில் சுமார் 7 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டது. கருவறையில் உள்ள சிவலிங்கம் உலகிலேயே பெரிய சிவலிங்கமாகும். 6அடி அகலம்,; 54அடி சுற்றளவு கொண்ட ஆவுடையார், 23அரை அடி உயரம் கொண்ட லிங்கம் ஆகியன தனித்தனியாக கருங்கற்களால் செதுக்கப்பட்டு இணைக்கப்பட்டுள்ளது. இக்கோவிலின் நுழைவாயிலில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான நந்தி சிலையின் உயரமும்ஈ அகலமும் முறையே 13 அடிகள் மற்றும் 16 அடிகள் ஆகும். தமிழகத்தில் இதே அமைப்பிலுள்ள மற்ற கோவில்கள் கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவில், திருபுவனம் கம்பஹரேஸ்வரர் கோவில் ஆகியவையாகும். ஆக்கோவில்கள் அனைத்தும் சோழ மன்னர்களால் கட்டப்பட்டவை ஆகும்.


உலகப் புகழ் பெற்ற தஞ்சைப் பெருவுடையார் கோவில் அல்லது தஞ்சை பெரிய கோவில் அல்லது பிரகதீஸ்வரர் கோவில் என்றும் அறியப்படும் சிவஸ்தலம் தஞ்சாவூரிலுள்ள, காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ளது. இக்கோவில் இந்தியாவில் சிவ பெருமானுக்காக கட்டப்பட்ட மிகப்பெரிய கோவில்களில் ஒன்றாகும். துமிழர் கட்டிடகலைக்கு சான்றாக விளங்கும் இக்கோவில் அற்புதமான கடடிடகலை அம்சங்களைக்கொண்ட கோவில்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது.


இக்கோவில் கிபி.10ஆம் நூற்றாண்டில் உலகப்பகழ் பெற்ற சோழப் பேரரசர் முதலாம் இராஜராஜசோழனால் கட்டப்பட்டது. கிபி 1003 – 1004ஆம் ஆண்டு கொடங்கி 1010 ஆம. ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட இந்த கோவில் ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் கம்பீரமாய் நிற்கிறது.


தஞ்சைப் பெருவுடையார் கோவில் என்பதன் வடமொழியாக்கமே பிரகதீஸ்வரர் கோவில். இக்கோவில் தஞ்சைப் பெரிய கோவில், பெரிய கோவில், இராஜராஜேஸ்வரன் கோவில், இராஜராஜேஸ்வரம் என்றும் அழைக்கப்படுகிறது. முதலாம் இராஜராஜசோழனால் கட்டுவிக்கப்பட்ட இக்கோவில் துவக்கக் காலத்தில் இராஜராஜேஸ்வரம் என்றும், பின்னர், தஞ்சைப்பெறுவுடையார் கோவில் என்றும் அழைக்கப்பட்டுவந்துள்ளது. 17ஆம் மற்றும் 18ஆம் நூற்றாண்டுகளில் மராட்டிய மன்னர்களால் ஆளப்பட்ட போது பிரகதீசுவரம் என்றும் அழைக்கப்பட்டுவந்துள்ளது.


தீவிர சிவ பக்தனான சோழ பேரரசன் இராஜராஜசோழன் சிவ பெருமான் மீது தான் கொண்ட அளவு கடந்த பக்தியால் ஒரு ஆலயம் அமைக்க எண்ணம் கொண்டார். அதன் படி இக்கோவில் கடடுவதற்கான கற்களை அண்டை மாநிலகங்களிலிருந்து கொண்டு வந்தார்.
இக்கோவிலின் கடடுமான வேலைகள் முதலாம் இராஜராஜசோழனின் 19ஆவது ஆட்சியாண்டில் துவக்கப்பட்டு (கிபி. 1003 – 1004), ஆவது ஆட்சியாண்டில் முடிவுற்றது. (கிபி 1009 – 1010). கோவிலின் வரைதிட்டத்தில், ஆள்கூற்று முறைமை, சமச்சீர்மை வடிவவியல் விதிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து அடுத்த இரு நூற்றாண்டுகள் வரை கட்டப்பட்டக் கோவில்கள், சோழர்காலத்தில் செல்வத்திலும், கலையிலும் சிறப்புற்று விளங்குவதற்குச் சான்றாக உள்ளது.


சோழர்காலக் கட்டிடகலையின் புதுவித அமைப்பாக சதுரப்போதிகைகள் கொண்ட பன்முகத்தூண்கள் காணப்படுகின்றன. சோழர்களின் கடடிடகலைக்கும், சோழர்களின் ஆட்சி மற்றும் தமிழ் மக்களின் நாகரிகத்திற்கும் சான்றாக அமைந்துள்ள இக்கோவில், கடடிடக்கலை, சிற்ப்பக்கலை, ஓவியக்கலை, வெண்கலச்சிலை உருவாக்கம் ஆகியவற்றில் சோழர்களின் திறமைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகவும் விளங்குகிறது.


இந்த கோவிலில் “வராகி அம்மன்” சன்னிதி இருக்கிறது. காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு அடுத்தபடியாக, வராகி அம்மன் தனி சன்னிதி இந்த கோவிலில் மட்டுமே இருக்கிறது. இராஜராஜசோழன் எந்க ஒரு காரியத்தை தொடங்குவதாக இருந்தாலும் இந்த வராகி அம்மனை வணங்கி விட்டு துவக்கும் வழக்கத்தை கொண்டிருந்தார். இந்த கோவிலில ;கருவூர் சித்தருக்கு தனி சன்னதி இருக்கிறது. இராஜராஜசோழன் இந்த பிரகதீஸ்வர கோவிலை கட்டி சடங்குகளை மேற்கொண்ட போது, அது சரியாக பொருந்தாமல் விலகி விழுந்துகொண்டேயிருந்தது. அப்போது சோழனின் அழைப்பை ஏற்று இங்கு வந்த கருவூரார், சிவன் மீது பதிகங்களை பாடி, இங்கிருந்த ஒரு துஷ்ட சக்தியை அழித்த பின்பு, அஷ்டபந்தனம் சாற்றும் சடங்கை மேற்கொண்ட கோது, அது சரியாக பொருந்தியதாக வரலாறு கூறுகிறது.